ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ். டபிள்யு. ஆர். டி.
பண்டாரநாயக்காவின் 57ஆவது நினைவு தின நிகழ்வு நாளை (26) ஹொரகொல்லையில் அமைந்துள்ள
அவரது சமாதிக்கு அருகில் நடைபெறவுள்ளது.
1959இல் இருந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 26ஆம் திகதி ஹொரகொல்லை சமாதிக்கு வரும்
ஆயிரக்கணக்காண மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த ஒன்று கூடுவது வழக்கமாகும்.
இம்முறையும் அமரரின் நினைவு தினத்தை அனுட்டிப்பதற்கான ஒழுங்குகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.