மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
2018இல் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் முழுமை பெறும்

2018இல் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் முழுமை பெறும்

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிப்பு

2018 ஜூன், ஜூலையில் தான் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் முழுமை பெறும். அது வரை மக்கள் காத்திருக்கவே வேண்டும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். முன்னைய அரசு விட்ட பிழைகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் பணத்தையெல்லாம் காலி செய்து விட்டார்கள். அதனால் பணத்தை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதற்காகவே வற் வரியை அதிகரித்தோம். 2018ஆம் ஆண்டில் நாடு முழுமையான முன்னேற்றத்தைக் காணும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதூர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் செலவில் பஞ்சதல இராஜகோபுரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்து சமய அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் இராஜ கோபுரத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். மட்டக்களப்பு ஸ்ரீ இராம கிருஷ்ண மிஷன் தலைவர் பிரபு பிரேமானந்த சுவாமிகள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட சமய பிரமுகர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]