மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதிருப்தி

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதிருப்தி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மநாநாட்டினை நடத்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து வட மாகாண முதலமைச்சர் தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு எப்போதும் வடமாகாண முதலமைச்சரையும் அமைச்சர்களையும் புறக்கணித்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதென்று அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமையன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வட மாகாண முதலமைச்சருக்கும் மாகாண சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாவென ஆளுனர் குரேயிடம் கேட்கப்பட்டபோது, வேறு விடயமாக தன்னைச் சந்திக வந்த முதலமைச்சரிடம் மாநாட்டுக்கான அழைப்பினைத் தான் விடுத்ததாகவும்.

முதலமைச்சர் எந்தவித எதிர்ப்பினையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். உண்மையில் இவ்வாறான மாநாடு வட மாகாண சபையினது அமைச்சர்களின் பூரண ஒத்துழைப்புடனும் பங்குபற்றுதலுடனும் நடைபெற வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]