பனை ஓலையும் எழுத்தாணியும் இணையும் நல்லிணக்க முயற்சி
தென்னிலங்கை ஊடகவியலாளர்களது
03 நாள் பயணம் நேற்று ஆரம்பம்
ஊடக அமைச்சர்களும் பங்கேற்பு வழிநெடுகிலும் அமோக வரவேற்பு
'பனை ஓலையும் எழுத்தாணியும் ஒன்றாக இணையும் நல்லிணக்க பயணம்' எனும் தொனிப் பொருளில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென்னிலங்கை ஊடகவியலாளர்களையும், வடபகுதி
ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைக்கும் ஊடகக் குழுவினரின் மூன்று நாள் நல்லிணக்க
வெற்றிப்பயணம் நேற்றுச் சனிக்கிழமை கொழும்பிலிருந்து ஆரம்பமாகி பிற்பகல்
யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து விசேட
புகையிரதம் மூலமாகத் தமது வடக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பித்த சுமார் 90 பேர்
கொண்ட மும்மொழிகளையும் சேர்ந்த ஊடகவியலாளர் குழுவிற்கு குருணாகல், அனுராதபுரம்,
வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களில் பிரதேச ஊடகவியலாளர்களாலும், பொதுமக்களாலும்
வரவேற்பளிக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர் குழுவுடன் ஊடகத்துறை அமைச்சர் கயந்த
கருணாதிலக, இராஜாங்க அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் பயணத்தில் தென்னிலங்கை மற்றும் வடபகுதி ஊடகவியலாளர்களிடையே காணப்படும்
இடைவெளியை நிரப்புவதுடன் இரு தரப்பினரிடையேயும் மேலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே
தமது நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விவரம்» |