தங்கொட்டுவ
புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையிலில் வேன் ஒன்றினுள்
இருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் நலாவலன பிரதேசத்தை சேர்ந்த இருவர்
சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள்
இருவரும் தந்தையும் மகனும் ஆவர். எரியூட்டப்பட்ட வாகனத்தின் சாரதியான கபில என்ற நபர்
சம்பவத்திற்கு முன்தினம் இவர்களின் வீட்டில் மது அருந்த சென்றுள்ளதோடு கபில குறித்த
சந்தேக நபர்களிடம் கப்பம் கேட்டு வந்துள்ளதகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.