மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை |
||
வேண்டுமொரு புதுவாழ்வுமுகில் துஞ்சு மலை சூழ்ந்த எங்கள் மலைநாடு! பச்சை எழில் கொஞ்சி விளையாடும் எங்களது வீடு! கிள்ளிக் கிள்ளி கொழுந்தெடுத்து கூடையிலே நிறைத்தோம்! நம்ம கெட்டு நொந்த வாழ்க்கையிலே மாற்றம் வர உழைத்தோம்! துரையோடு கங்காணியும் தோளோடு தோள் நிற்பர் கரைந்தோடும் நம்வாழ்வை இங்கு! காப்பாற்ற யாருமில்லை! லயத்து வாழ்க்கை எப்போ? நம்ம வீட்டு போகுமையா நம்ம வயத்துப் பசி போக்க உண்ணும் நாளும் வருவ தெப்போ! ஏற்ற கூலி நாம் கேட்டால் ஏளனமும் செய்கின்றனர் ஏதேதோ வாக்குறுதி அள்ளி அள்ளித் தெளிக்கின்றார் நூற்றாண்டு இரண்டுகள் இந்த மண்ணில் தொலைத்த இனம் மாற்றாந்தாய் மனத்தினரால் மாளுதையா மலையினிலே பரம்பரையாய் உழைத்துழைத்து பாடுபடும் பாட்டாளி விடியலைத் தேடுகிறோம்! விடிவதெப்போ புதுவாழ்வு! மணிமேகலை வரதராஜன், வந்தாறுமூலை |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |