மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை |
||
தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்கட்டடங்களுக்குள் சிக்கிய உயிர்கள் தாய்வான் யூஜிங் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் காணப்படும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. அக்குடியிருப்பில் இருந்த 221 பேரை மீட்புக் குழுவினர் இதுவரை மீட்டுள்ளனர். இவர்களில் 115 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்க அதிர்ச்சியில் இருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தாய்வான் நகரின் வெய் குவன் உயர் அடுக்கு மாடி கட்டிடங்கள்தான் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தைனான் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், கட்டடங்கள் மிக மோசமாக சேதமடைந்திருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |