மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை |
||
விபுலமுனியின் விழி திறப்பது எப்போது ?அகிலம் போற்றும் முத்தமிழ்வித்தகர் சுவாமிவிபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணில் நிருமாணிக்கப்பட்டுள்ள அடிகளாரின் திருவுருவச்சிலை கடந்த ஒருவருட காலமாக பூரணப்படுத்தப்படாமல் மூடியபடி உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இச்சிலை காரைதீவு பிரதான வீதியிலுள்ள முச்சந்தியில் நிருமாணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்படுவதாக சொல்லப்பட்ட இச்சிலை ஒருவருடம் கழிந்தும் இன்னும் திறக்கப்படாமல் அரைகுறைநிலையிலிருப்பது அவமானத்தை ஏற்படுத்துவதாக மக்கள் குறை கூறுகின்றனர். இது தொடர்பாக காரைதீவுப் பிரதேச சபையின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தரான எஸ். நாகராஜாவிடம் கேட்டபோது: இச்சிலை இன்னும் திறக்கப்படாமலிருப்பது வேதனைதான். நான் சம்பந்தப்பட்ட சிலை அமைப்புக் குழுவினருக்கு இது தொடர்பாகதெரியப்படுத்தியுள்ளேன். அவர்கள் பூர்த்திசெய்வதாகத் கூறியுள்ளனர். எனினும் காலம் தாழ்த்தப்படுவது வேதனைதான் என்றார். தகவலும் படமும். காரைதீவு குறூப் நிருபர் சகா தேவராஜா |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |