ஆம்! சீரற்ற மாதவிலக்கு மகப்பேறின்மைக்குக் காரணமாகலாம் என்பது உண்மைதான்! ஆனால்,
சீரற்ற மாதவிலக்கு உடைய எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்தாது. உங்களுக்கு சீரற்ற
மாதவிலக்கு இருக்குமானால், நீங்கள் சராசரி தம்பதியினரைப் போல் அல்லாமல்,
மகப்பேற்றில் பல பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டி ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சினைகள்
பற்றியும், உங்கள் உடல் பற்றியும் தெரிந்துகொள்வதன் மூலம் உங்களுக்குப் பொருத்தமான
சிகிச்சை எதுவாக இருக்கும் என்பதை நீங்கள் அறியலாம்.
மகப்பேறின்மையால் பாதிக்கப்பட்டவர்களில் முப்பது முதல் நாற்பது சதவீதமானவர்கள்
சீரற்ற மாதவிலக்கு அல்லது வழக்கத்துக்கு மாறான கருமுட்டை உற்பத்தி போன்ற பிரச்சினை
உடையவர்களே! மாதவிலக்கு ஏற்படாமை மற்றும் வழக்கத்திற்கு அதிகமான இரத்தப்போக்கு
போன்றன உள்ளிட்ட மாதவிலக்குப் பிரச்சினைகள் அனைத்துமே, உங்களுக்குள் கருமுட்டை
உற்பத்தி சீராக இல்லை அல்லது கருமுட்டை வெளியேறுவதில் பிரச்சினை என்பவற்றுக்கான
அடையாளங்களே என்கிறார், சென்னையில் இயங்கிவரும் சிருஷ்டி கருத்தரிப்பு மையத்தின்
தலைமை மருத்துவர் எஸ்.சாமுண்டிசங்கரி.
சீரற்ற மாதவிலக்கை எவ்வாறு அடையாளம் காண்பது?
அனேகமான பெண்களுக்கு மாதவிலக்குச் சுற்று சீராக இருப்பதில்லை. பல பெண்களுக்கு 24
முதல் 35 நாட்களுக்குள்ளேயே மாதவிலக்கு உண்டாகும். அனைத்துப் பெண்களுமே
இனப்பெருக்கம் செய்யக்கூடிய வயதுகளில், அதாவது தமது மாதவிலக்கு சுழற்சிக் காலங்களில்,
குறைந்தது இரண்டு முறையாவது சீரற்ற மாதவிலக்குக்கு முகங்கொடுக்கிறார்கள். ஒருவேளை
தொடர்ச்சியாக உங்கள் மாதவிலக்கை முன்கூட்டியே கணிக்கமுடியாமல் இருந்தால், அதாவது
உங்களது மாதவிலக்கு சுழற்சியானது மாதாமாதம் வித்தியாசப்படும் என்றால், நீங்கள்
சீரற்ற மாதவிலக்குக்கு முகங்கொடுக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ளலாம்.
சீரற்ற மாதவிலக்கானது கருத்தரிப்பை எவ்வாறு பாதிக்கிறது?
பல தம்பதியினர், மனைவியின் கருமுட்டை வெளியாகும் நாளைக் கணக்கிட்டு,
கருத்தரிப்புக்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆனால்,மாதவிலக்கு சீரற்று இருக்கும்
பெண்களுக்கு, சிலபல காரணங்களால் இது கைகொடுக்காது போகலாம்.
மாதவிலக்குச் சுழற்சி ஒழுங்கற்ற முறையில் இருந்தால், உங்களது கருப்பையிலிருந்து
கருமுட்டை வெளியாகும் நாளும் ஒழுங்கில்லாததாக அமைய வாய்ப்பிருக்கிறது. உங்களது
கருப்பை மற்ற பெண்களைவிட மிகக் குறைவான தடவைகளே முட்டைகளை வெளியிடுகிறது என்பதையே
இது காட்டுகிறது. ஒரு பெண்ணின் கருப்பை, பூப்பெய்தியது முதல் மெனோபாஸ் வரை,
கருமுட்டைகளை வெளியிடும் காலம் குறுகியதே என்பதால் மாதவிலக்குப் பிரச்சினை இருந்தால்
நீங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளும் குறைந்துவிடும். மாதவிலக்கு ஏற்படுவதற்கு
சுமார் இரண்டு வார காலத்துக்கு முன்புதான் கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியாகும்.
இந்தக் கருமுட்டையின் கருவைச் சுற்றி திரவம் நிரம்பிய ஓடு மூடியிருக்கும். சீரற்ற
மாதவிலக்கு இருந்தால், இந்தக் கருமுட்டைகள் வெளியாகும் காலத்தை உறுதிசெய்வது
சிரமமாகிவிடும்.
அன்டவிடுப்பின்(OVULATION) அறிகுறிகள் என்ன?
நீங்கள் சீரற்ற மாதவிலக்கு உடையவராக இருந்தாலும், மற்றவர்களை விடக் குறைவான தடவைகளே
உங்களது கர்ப்பப்பை கருமுட்டைகளை வெளியிட்டாலும்கூட, நீங்கள் கருவுறுவதற்குப்
பொருத்தமான நாட்களை உறுதியாகக் கண்டறிவதற்குச் சில வழிமுறைகள் இருக்கின்றன.
கருமுட்டைகள் வெளியேறும் நாட்கள் தவறினாலும்கூட, சில அறிகுறிகளைக் கொண்டு கருமுட்டை
வெளியேறுவதைக் கண்டறிய முடியும்.
உங்களது கருப்பையில் இருந்து கருமுட்டைகள் வெளியேறும் காலத்தில், உங்களது
பிறப்புறுப்பில் இருந்து தெளிவான, அடர்த்தி குறைந்த திரவம் அல்லது சற்று வெள்ளை
நிறமும் பிசுபிசுப்பும் கொண்ட திரவம் வெளியேறத் தொடங்கும். இது தவிர, மார்பகங்கள்
சற்றுத் தளர்வாக அல்லது மென்மையானவையாக மாறுவது, உடல் வெப்பநிலை வழக்கத்தைவிடச்
சற்று அதிகரிப்பது, வயிற்றில் தசைப்பிடிப்புப் போன்ற உணர்வு என்பனவும் காணப்படும்.
இந்த அறிகுறிகள் உங்களுக்குக் கைகொடுக்காத நிலையில், கருமுட்டை வெளியேறுவதை
வீட்டிலேயே கண்டறியும் பரிசோதனையைச் செய்யலாம்.
கருமுட்டை வெளியேறுவதைக் கண்டறியும் பரிசோதனையானது, உங்கள் உடலில் சுரக்கும் உடல்
வேட்கைக்கான ஒரு ஹார்மோனின் அளவை அடிப்படையாகக் கொண்டது. கருமுட்டை வெளியேறும்
காலத்தில் இந்த ஹார்மோன் சற்று அதிகமாகச் சுரக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்
தொடர்ச்சியாக இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது மிக முக்கியம். இதன்மூலம் எப்போது
இந்தச் சுரப்பு அதிகமாகச் சுரக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
இந்த ஹார்மோன் மதிப்பீடானது, உங்களது உடலுக்குள் கருமுட்டை வெளியேற்றம்
நடைபெறுகிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய உதவும். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்
மருந்துகள் மூலமோ, ஹார்மோன் ஊசிமருந்துகள் மூலமோ அல்லது இவை இரண்டினதும் மூலமோ,
ஒன்று அல்லது இரண்டு கருமுட்டைகளை வெளிக்கொணர முடியும். இதேவேளை, தொடர்ச்சியான
அல்ட்ராசவுண்ட் சிகிச்சை மூலம் அந்தக் கருமுட்டைகளை ஆரோக்கியமான நிலைக்கு மாற்றவும்
முடியும்.
உங்கள் கணவரது உயிரணுக்கள் ஆரோக்கியமானவை எனக் கண்டறியப்பட்டால், மேற்படி கருமுட்டை
வெளியாகும் நேரத்தில் சாதாரண உடலுறவு மூலமே கருத்தரித்தலை உறுதிசெய்யலாம். ஒருவேளை
அவரது உயிரணுக்கள் சாதாரண நிலைக்குக் குறைவான வீரியம் கொண்டவையாக இருந்தால்,
‘அல்ட்ரா யுட்டரின் இன்செமினேஷன்’ எனப்படும் (IUI) சிகிச்சை பரிந்துரை
செய்யப்படும். (IUI) சிகிச்சையின்போது, ஆணின் விந்தணுக்கள் பெறப்பட்டு, பெண்ணின்
கருப்பை கருமுட்டைகளை வெளியிடும்பொழுது, அவரது கருப்பைக்குள் வைக்கப்படும் ஒரு
நடைமுறையே! முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த சிகிச்சை பலன்தரும்
வாய்ப்புகள் குறைவு என்பதால், முப்பது வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கே இந்த
சிகிச்சை பொருந்தும்.
நவீன மருத்துவத் தொழில்நுட்பம்
எந்தத் தம்பதியினரும் குழந்தைப்பேறின்றி இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும்
வகையில் இன்றைய மருத்துவத் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறிவிட்டது. கருமுட்டைகளை
உற்பத்தி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பெண்களுக்கு, கருமுட்டை தானம் மற்றும்
வாடகைத்தாய் போன்றன கைகொடுக்கின்றன. சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கருப்பைகள்
முதிர்ந்து செயலிழந்துவிடும். இன்னும் சில பெண்களுக்குப் பிறவியிலேயே கருப்பை
இருக்காது. மேலும் சிலருக்கு பிறவிக் குறைபாடுகள் இருக்கும். எது
எப்படியிருந்தபோதும், சரியான பரிசோதனைகளைச் செய்து, தத்தமது உடல்நிலையைத்
தெரிந்துகொள்வது நல்லது.
சிருஷ்டி மருத்துவமனையில், தம்பதியினர் இயற்கை முறையில் கருவுருவதற்கான வாய்ப்புகளை
ஏற்படுத்திக்கொடுப்பதையே நாம் நோக்காகக் கொண்டிருக்கிறோம். தேவைகள் ஏற்பட்டால்
மட்டுமே (IUI) ,IVF என்ற ஆரம்பநிலை செயற்கை கருத்தரிப்பு முறை முதல், வாடகைத்தாய்
வரையான சிகிச்சைகளைப் பரிந்துரைக்கிறோம். 1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிருஷ்டி
மருத்துவமனையில், இதுவரை 14.000 பேர் கருத்தரித்திருக்கிறார்கள். பல சிகிச்சைகளின்
மூலம் அதிக வெற்றிவாய்ப்புகளை வழங்கிவருகிறார்கள்.
இங்கு பல பெண்கள், அவர்களது கருப்பையின் நுண்ணறைகளைச் சரியாக அவதானிப்பதன் மூலமும்
நிபுணத்துவம் வாய்ந்த வழிகாட்டல்களின் மூலமுமே கருத்தரித்திருக்கிறார்கள். சிருஷ்டி
மருத்துவமனையில், ஆரம்பத்திலேயே அதி உயர் சிகிச்சைகளைப் பரிந்துரைப்பதில்லை.
எளிமையான சிகிச்சைகளின் மூலமே மகப்பேற்றுக்கு முயற்சி செய்து, அவை கைகொடுக்காத
நிலையிலேயே அடுத்த நிலை சிகிச்சைக்கு எடுத்துச் செல்கிறோம்.
சென்னையில், மகப்பேறின்மைக்கான சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும்
ஒரே கட்டிடத்தின்கீழ் கொண்டிருப்பது சிருஷ்டி மருத்துவமனை மட்டுமே. இங்கு,
மகப்பேற்றுக்குத் தேவைப்படும் அறுவை சிகிச்சைகள், செயற்கை கருத்தரிப்பு
சிகிச்சைகள், மகப்பேறு மற்றும் மகப்பேற்றுக் குறைபாடுகளைச் சரிசெய்யும் மருத்துவத்
தொழில்நுட்பங்கள் மற்றும் தாய்-சேய் நலன் சார்ந்த அனைத்து சிகிச்சைகளையும்
பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, மகப்பேறு இல்லையே என்று மனம் கலங்காதீர்கள். வாருங்கள். உங்கள் மடியில்
தவழவும் ஒரு குழந்தை வரத்தான் போகிறது!
தொடர்புக்கு
டாக்டர் சாமுண்டி சங்கரி
இந்தியா- -00919840669669
இலங்கையில் - 0772646800