மன்மத வருடம்
கார்த்திகை மாதம்
06ம் நாள்
ஞாயிற்றுக்கிழமை |
|||||
பாத்திமா 'hனீஎஹியாகான் - கதீஜா எமது கல்லூரிஎத்திசை நோக்கினும் பச்சைப் பசேலென கம்பளம் விரித்தாற் போல் புற்பூண்டு, செடி கொடிகள், மரம் மட்டைகள் இவைகளைத் தாங்கி நிற்கும் உயர்ந்த மலைத் தொடர்கள் ஆங்காங்கே காணப்படும் கற்பாறைகள், இன்னும் பல இயற்கை காட்சிகளைக் கொண்ட நாவல் நகரிலே அமையப்பெற்றுள்ளது சென்.மேரிஸ் கல்லூரி. மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் நாவல் - நகர் மத்தியிலே அமைந்துள்ள மிகவும் பழமைமிக்க எமது இக்கல்லூரி நூறு ஆண்டுகளை தாண்டிக் கொண் டிருக்கிறது. கடந்த காலங்களில் நாடு போற்றும் நல்ல பல எழுத்தாளர்களையும், புத்திஜீவிகளையும், சிறந்த அதிபர்களையும் ஆசிரிய ஆசிரியைகளையும், அறிஞர்களையும், கலைஞர்களையும், அரச உத்தியோகத்தர்களையும் உருவாக்கித் தந்த பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. எமது கல்லூரியில் இப்போது அதிபர் உட்பட 40 ஆசிரிய ஆசிரியைகள் சேவையாற்றுகிறார்கள். 577 மாணவ மாணவிகளைக் கொண்ட இக்கல்லூரியில் எல்லோரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவம், சமத்துவம் பேணி கல்வி கற்கிறார்கள். எனவே அரிதிலும் அரிதாய் எமக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை பயன்படுத்தி அழியாச் செல்வமாம் கல்வியை கற்று நல்லறிவு பெற்று நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லவர்களாக வாழ்ந்திடவும் எமது சென் - மேரிஸ் கல்லூரி இன்னும் நல்ல பல முன்னேற்றங்களை அடைந்திட இறைவனை வேண்டுகிறேன். மழை பெய்யும்போதுமேகம் திரளுது வானம் இருளுது
|
|||||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |