மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
இலங்கை - இந்தியா - இங்கிலாந்து: பங்குகொள்ளும் முக்கோணத் தொடர்

இலங்கை - இந்தியா - இங்கிலாந்து: பங்குகொள்ளும் முக்கோணத் தொடர்

அடுத்து வருட ஆரம்பத்தில் 19 வயதுக் குக்குட்பட்டோருக்கான இளையோர் உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடர் நடை பெறவுள்ளது. அதற்கு இலங்கை அணி யைத் தயார் படுத்தும் முகமாக டிசம்பர் மாதம் இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் பங்கேற்கும் முக்கோண தொடரொன்று இலங்கையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்த முக்கோணத் தொடர் அடுத்த மாதம் 11 ஆம் திகதி தொடங்கி 21 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடாகியுள் ளது. இம்முக்கோணத் தொடரில் முதற் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் இரு முறைகள் மோதவு ள்ளன. ஒவ்வொரு அணியும் முதற் சுற்றில் 4 போட்டிகளில் மோதவுள்ளன. முதற் சுற்று முடிவுகளின் அடிப்படையில் முதலா வது, இரண்டாவது இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோத வுள்ளன. இறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அனைத்துப் போட்டிகளும் ஆர். பிரேம தாச மைதானத்திலேயே நடைபெற ஏற்பா டாகியுள்ளன.

அடுத்த 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலகக் கிண்ணப் போட்டி கள் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]