தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது
நியாயமான தீர்வே எமக்கு தேவை
தேவையான விடயங்களுக்கு எமது ஆதரவை வழங்கி வெற்றி காண்போம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நிரந்தரமானதும், நீதியானதுமான ஒரு தீர்வையே நாம்
எதிர்பார்க் கின்றோம். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தடவையும் எமது
மக்களின் அபிலாஷைகளை சர்வதேசமோ அல்லது இலங்கை அரசாங்கமோ ஏமாற்ற நாம் ஒருபோதும் இட
மளிக்கமாட்டோம். அதற்குத் தேவையானதும், வலுவானதுமான சகல விதமான நடவடிக் கைகளையும்
நாம் எடுத்துள்ளோம்.
அதேவேளை தேவையான விடயங்களுக்கு விட்டுக் கொடுத்தும், எமது
ஆதரவை வழங்கியும் வெற்றி காண்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,
எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னர் பல தடவைகள் இலங்கை அரசாங்கமும், சர்வதேசமும் எம்மை ஏமாற்றி வந்த மிகச்
சிறந்த அனுபவங்களை நாம் கொண்டிருக்கிறோம். அதனால் இத்தடவை நாங்கள் ஒவ்வொரு சிறு
விடயத்திலும் மிகவும் விழிப்பாக இருக்கிறோம். அத்துடன் இந்தத் தடவை இலங்கை
அரசாங்கத்தின் மீதும், சர்வ தேசத்தின் மீதும் நாம் நம்பிக்கை வைத்துச் செயற்
படுகின்றோம். காரணம் இது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அல்ல.
விவரம் |