மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
ஜனாதிபதி மைத்திரிபால ஐ.நாவில் புதனன்று உரை

ஜனாதிபதி மைத்திரிபால ஐ.நாவில் புதனன்று உரை

பராக் ஒபாமாவையும் சந்தித்துரையாடுவார்

ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொது சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதன்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் புதன்கிழமை (30) இலங்கை நேரப்படி இரவு 7.15 க்கு பொது சபை மாநாட்டில் உரையாற்ற வுள்ளார்.

அதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை (27) இலங்கை நேரப்படி 7.15 க்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மாநாட்டிலும் ஜனாதிபதி உரையாற்ற வுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் அமெரிக்கா சென்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]