மிகவும் அரிதான சந்திர கிரகணம் ஒன்று இன்று ஏற்படவுள்ளதாக வானியல் விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர்.
30 வருடங்களுக்குப் பின்னர் இப்படியான சந்திர கிரகணம் ஒன்று ஏற்படவுள்ளதாக நாஸா
நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திர கிரகணம் இலங்கையர்களும் காணக்கூடியதாக இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரகாஷமான மற்றும் மிகப் பெரிதாக சந்திரன் தென்பட்ட பின்னரே இந்த சந்திர
கிரகணம் நிகழவுள்ளது.
ஏனைய நாட்களில் தென்படும் சந்திரனை விட இன்று தென்படும் சந்திரன் 17 வீதம் பெரிதாக
தென்படும் என்பதுடன் 100 வீதம் பிரகாஷமாக இருப்பதை காணமுடியும் எனவும் நாஸா நிறுவனம்
கூறியுள்ளது.
இந்த நிலையில் நாளை கடல் அலையின் மட்டம் சற்று உயரக்கூடும் எனவும் அது பற்றி அச்சம்
கொள்ள தேவையில்லை எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.