மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
அகவையில் எண்பது சேவையில் ஐம்பது

அகவையில் எண்பது சேவையில் ஐம்பது

“ஷண்” னுக்கு நேற்று பாராட்டு விழா

“ஷண்” என்று வாசகர்களால் நன்கறியப்பட்ட மூத்த பத்திரிகையாளரான “சஞ்சேயன்” சண்முகராஜா நேற்றுத் தனது 80 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு கொழும்பு ஊடக வட்டத்தினர் நேற்று மாலை வெள்ளவத்தை மிராஜ் ஹோட்டலில் மாபெரும் பாராட்டு விழா ஒன்றினை நடத்தினர்.

இவர் ஆற்றிவரும் மிக நீண்டகால பத்திரிகைத் துறைப் பணியைக் கெளரவித்து இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும். இலங்கை பத்திரிகை மன்றமும் இணைந்து அண்மையில் இவரைக் கெளரவித்திருந்தன.

நேற்றைய விழாவில் “ஷண்” பிரமுகர்கள் மற்றும் நண்பர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டதுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். வித்தியாதரன், வீரசேகரி வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகரன், தினக்குரல் பிரதம ஆசிரியர் என். தனபாலசிங்கம், தினகரன் வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், சுடர்ஒளி பிரதம ஆசிரியர் என். பத்மசீலன் ஆகியோர் இவரை வாழ்த்தி உரையும் நிகழ்த்தினர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]