மன்மத வருடம் புரட்டாதி மாதம்
03 திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
சர்வதேச சிறுவர் தினம் -ஒக்.01“நாங்கள் எங்களுடைய சிறுவர்களை பொக்கிஷங்களாக பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டு சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதேயாகும். இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சி னைகளுள் ஒன்றாக சிறுவர் மீதான துஷ்பிரயோகம் விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற விடயம் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருப்பினும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அது பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப்படுகின்றனர்.
அத்தோடு அவர்கள் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற பலவீனர்களாகக் காணப்படுவதனாலேயே
அவர்களின் உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன. இவ்வாறான உரிமை மீறல்கள்,
துஷ்பிரயேகங்களில் இருந்தும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகப் பல கொள்கைகள் மற்றும்
பிரகடனங்கள் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. ஆனால் இன்றைய மனித சமுதாயமானது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி
நகர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை சிறுவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளும்
துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மேற்படி அனைத்து நிறுவனங்களினதும் சேவைகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவது
அத்தியாவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர்
தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். மேலும் சிறுவர் தினம் சம்பந்தமாக
குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில் எந்தப் பயனும் இல்லை.
வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு
உட்பட வேண்டியது அவசியமாகும். அழகு தரும் பூக்கள்மண்ணில் மலர்ந்த பூக்கள் - அவை உ. நிசார் நீர்ப்பாசனத் துறையில் சாதனைகளை
|
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |