மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
பட்டுபாதை கலாசார நிகழ்வில் பங்கேற்பு

பட்டுபாதை கலாசார நிகழ்வில் பங்கேற்பு

(அக்கரைப்பற்று விசேட நிருபர்)

சர்வதேச பட்டுப் பாதை யின் இரண்டாவது கலா சார நிகழ்வுகள் ரஷ் யாவின் தலை நகர் மொஸ்கோவில் உள்ள பிரசிடன் ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் இம் மாதம் 13ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங் கையிலிருந்து கல்வியலாளராக முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டு பல்பக்க பொருளாதார ஒத்துழைப்பின் நிலையான அபிவிருத்திக்கு ஏற்ற வலுவான அவசியம் என்ற தொனிப் பொருளில் உரையாற றினார். இலங்கையிலிருந்து சென்ற பிரதி நிதிகள் குழுவில் பொருளியலாளர், ஊடகவி யலாளர், வைத்தியத்தியர் என துறைசார் நிபுணர்கள் மொத்தம் நான்கு பேர் பங்கு பற்றினர். இம்மாநாட்டில் 120, நாடுகளைச் சேர்ந்த 1050, துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]