புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
பாராளுமன்றம் அங்கீகரித்தால் அடுத்த ஆண்டு முதல் மரண தண்டனை அமுல்

பாராளுமன்றம் அங்கீகரித்தால் அடுத்த ஆண்டு முதல் மரண தண்டனை அமுல்

ஜனாதிபதி அறிவிப்பு

பாராளுமன்றம் இணங்கினால் மரண தண்டனை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காலியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

குற்றவியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நடைமுறைப்ப டுத்துவது தொடர்பிலான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு செயலணி, காலி நகர சபை மண்டபத்தில் நடத்திய தேசிய வேலைத் திட்டத்தில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொட தெனியாவில் 5 வயது சிறுமி படுகொலை செய்யப் பட்டதன் பின்னர், மரணதண்டனையை நிறைவேற்றுமாறு பல கோரிக் கைகள் முன்வைக் கப்பட்டன.

இதற்கு முன்னரும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அபிவி ருத்தி அடைந்த பல நாடுகளில் மரணதண்டனை நடைமுறையில் இருக்கின்றது என்றும் ஜனாதிபதி கூறினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.