புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
சுற்றுலா சென்ற மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

சுற்றுலா சென்ற மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

திருமலை காந்தி நகரில் சம்பவம்

திருகோணமலை, இறக்கக்கண்டி காந்தி நகர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த நசீர் முஹம்மத் ஹாசீர் என்ற 15 வயது சிறுவன், நேற்று (19) காலை கடலில் மூழ்கி உயிழந்துள்ளான் என குச்சவேளி பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்றிருந்த கண்டி, அரபிக் கல்லூரி மாணவர்கள், கடற்கரையில் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, பந்து கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அதை எடுக்க முயற்சித்த போதே குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான் எனவும் தெரிவிக்கிப்படுகின்றது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(திருமலை மாவட்ட விசேட குறூப் நிருபர் பரீட், அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.