திருகோணமலை, இறக்கக்கண்டி காந்தி நகர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த நசீர்
முஹம்மத் ஹாசீர் என்ற 15 வயது சிறுவன், நேற்று (19) காலை கடலில் மூழ்கி
உயிழந்துள்ளான் என குச்சவேளி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்றிருந்த கண்டி, அரபிக் கல்லூரி
மாணவர்கள், கடற்கரையில் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, பந்து கடல் அலையால்
இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அதை எடுக்க முயற்சித்த போதே குறித்த சிறுவன் நீரில்
மூழ்கி உயிரிழந்துள்ளான் எனவும் தெரிவிக்கிப்படுகின்றது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார்
தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
(திருமலை மாவட்ட விசேட குறூப் நிருபர் பரீட், அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)