மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
ஐக்கிய தேசிய கட்சியின் 69 ஆவது ஆண்டு விழா
ரணில் தலைமை; ஜனாதிபதி அதிதி
ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது நிறைவாண்டு விழா இன்று 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிறைவாண்டு விழா காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 64 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரொருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவாண்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும். ஐக்கிய தேசிய கட்சி இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ்.சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரந ¡யக்கவும் அதே கட்சியிலேயே இருந்தார். எனினும் 1951ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூர். ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (எம்.கே.முபாரக் அலி) |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |