சிரிக்க வந்தவர்களுக்கு அதிர்ஷ்டமும் அடித்த ஏழாவது நகைச்சுவை சங்கமம்
சிரிக்க வந்தவர்களுக்கு அதிர்ஷ்டமும் அடித்த ஏழாவது நகைச்சுவை சங்கமம்
நம் நாடு நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஏழாவது
நகைச்சுவை சங்கமம் கடந்த 29.08.2015 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள புரவலர் ஹாஷிம் உமர் இல்ல மண்டபத்தில் கலகலப்பாக
நடைபெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் தேசியத் தலைவர் திரு. உதுமா
லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்த சுவாரஸ்யமான நிகழ்வில் தமிழகப் பிரமுகர்களான கவிஞர்
பேனா மனோகரன், காந்தி கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் திரு. பி.
ஆனந்தகுமார், தமிழக ஊடகவியலாளர் திரு. சாஹுல் ஹமீட் ஆகியோர் விசேட அதிதிகளாகக்
கலந்து சிறப்புச் சேர்த்தனர்.
மாதம் ஒருமுறை நடைபெறும் இந்த சங்கமம் மாதம், இருமுறை நடைபெற வேண்டும் என பலர்
ஆனந்த வேண்டுகோள் விடுத்தனர்.
பல மனச்சுமைகளோடு வருகின்ற நாம் போகின்ற பொழுது பல மனச் சுகங்களோடு செல்கிறோம் என
பாராட்டுத் தெரிவித்தனர்.
விழாத்தலைவர் திரு. உதுமா லெப்பைக்கு ஊடாகவியலாளர் மனிதநேயன் இர்ஷாத் ஏ காதர்,
பேராசிரியர் திரு. ஆனந்தகுமாருக்கு கலாபூஷணம் சமூக ஜோதி றபீக், ஊடகவியலாளர் திரு.
சாஹுல் ஹமீதுக்கு புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்தனர்.
ஏழாவது நகைச்சுவைச் சங்கம் அதிர்ஷ் டமும் கலந்து ஆனந்த சங்கமமாக அமைந்தது. விழா
முடிவில் அதிர்ஷ்டசீட்டின் மூலம் மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு
பரிசில்களும் வழங்கப்பட்டன.