மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
நம் நாட்டில் புழக்கத்திலுள்ள நாணயங்கள்இலங்கை சுதந்திரமடைந்ததையடுத்து நாட்டின் சுற்றோட்டத்திற்கான நாணயத்தினை 1949ம் ஆண்டின் 58ம் இலக்க நாணயவியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியே வெளியிட்டு வருகின்றது. ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட நாணயக் குற்றிகள் புழங்கின. 1972, 1978ஆம் ஆண்டுகளில் 1.2.5.10.25.50 மற்றும் ஒரு ரூபா நாணயக்குற்றிகள் வெளியிட்டப்பட்டன. இதைவிட ரூபா 2,5,10,100, 1000, 5000 ரூபா பெறுமதியான ஞாபகார்த்த நாணயக் குற்றிகளும் வெளியிடப்பட்டன.
படத்தில் காணப்படுவது ஆயிரம் ரூபா பெறுமதியுடைய வெள்ளியிலான ஞாபகார்த்த குற்றியாகும்.
2000ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்நாணயம் 3.9 சென்றி மீட்டர் விட்டத்தையும் 28. 28
கிராம் நிரையும் கொண்டது. முற்புறம் இலங்கை மத்திய வங்கியின் 50வது ஆண்டைக்
குறிக்குமுகமாக ஆண்டுகளும் இலங்கை மத்திய வங்கி எனும் பதம் மும்மொழிகளிலும் இலங்கை
மத்திய வங்கியின் உருவும் பெறுமதியும் காணப்படுவது போல் மறுபுறம் இலங்கையெனும் பதம்
மும்மொழிகளிலும் அழுத்திய ஆண்டான 2000மும் சூரியனுடன் எட்டு சுபராசிகளின்
உருவங்களும் காணப்படுகின்றன. கே.ஏ.அலீம்
முயற்சி உடையார்இகழ்ச்சி அடையார்முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது முது மொழியாகும் மனிதன் பாராட்டால் முன்னேற்றி உள்ளான் என்றால் அவனது முயற்சியே அதற்கு மூல காரணமாகும் முயற்சி செய்தால் இவ்வுலகில் அடைய முடியாதது எதுவும் இல்லை இதனையே மேற்கூறிய முதுமொழியும் நமக்கு உணர்த்துகிறது. முயற்சி நம் புகழை அதிகமாக்கும் வாழ்வு என்பது போராட்டம் நிறைந்தது அதில் வெற்றி பெற முயற்சி வேண்டும். முயற்சி உடையவன் தன் துன்பத்தை மட்டுமின்றி தன் சுற்றத்தாரின் துன்பத்தையும் போக்கிட உதவுகிறான் உறவினர் தம் துயர் போக்குகிறான். முயற்சியின் மேன்மையை புலவர்கள் பலரும் அழகுற எடுத்துரைத்துள்ளனர். திருவள்ளுவர். முயற்சியின் உயர்வையும் சிறப்பையும் நன்கு வலியுறுத்தியுள்ளார். வறுமையைக் கண்டு நாம் அஞ்சக் கூடாது தோல்வியை கண்டு துவண்டு விடுதல் ஆகாது “முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்” என்ற உண்மையை மறக்கக் கூடாது, முயன்று முன்னேற தவறக் கூடாது. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணத்துடன் முயற்சிப்போம் வாழ்வில் வெற்றி காண்போம்.
ஏ.ஆர்.எப்.ரஸ்மினா ஆண்டு 6 தி ப/அல் இர்ஷாத் ம.வி. ஹாலிஎல.
மேரி க்யூரி
புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞரான மேரி க்யூரி போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்த இவர், இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.
இவரது சாதனைகள் முதன்மையானவை கதிரியக்கம் (இது இவர் உருவாக்கிய சொல்) பற்றிய ஓர் கோட்பாடு கதிரியக்க ஜசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள், மற்றும் இரண்டு கூறுகள், புளோனியம் மற்றும் ரேடியம் ஆகியனவற்றை கண்டுபிடித்தல். இவரது வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக, கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர் பாரிஸ் மற்றும் வார்சா ஆகிய நகரங்களில் க்யூரி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். இவை மருத்துவ ஆராய்ச்சிக்கான முக்கிய மையங்களாக இன்றும் திகழ்கின்றன. முதலாம் உலகப் போரின்போது, இராணுவத் துறையில் கதிரியக்க மருத்துவ மையங்களை முதன்முறையாக நிறுவினார். ஒரு பிரஞ்சு குடிமகளாக இருந்தபோதிலும், மேரி ஸ்க்ளோடவ்ஸ்கா - க்யூரி தனது போலந்து நாட்டு அடையாளத்தை இழக்கவில்லை. தனது மகள்களுக்கு போலிஷ் மொழி கற்றுத்தந்தார். மேலும் போலந்திற்கு அவர்களை சில முறைகள் அழைத்துச்சென்றிருக்கிறார். தான் முதன்முதலாக கண்டுபிடித்த தனிமத்திற்கு தனது தாய்நாட்டை கெளரவிக்கும் வகையில் போலோனியம் என்று பெயரிட்டார். க்யூரி ஆண்டாண்டு காலமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் அப்பிலாஷ்டிக் இரத்த சோகையால், 1934இல் மரணமடைந்தார்.
சிந்தனைகள்
தியானம் ஜென் குருவிடம் ஒருவன் வந்து, எப்படி தியானத்தில் ஈடுபடுவது? என்று கேட்டான் என்னைப் பார்த்துக் கொண்டிரு. தியானம் உனக்குக் கைவரும் என்றார் ஜென். அவனும் சம்மதித்தான். காலையில் குரு எழுந்தார். குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார். உணவு வேளையில் உண்டார். ஆனால் வழிபாடு, பிரார்த்தனை, தியானித்தல், படித்தல் என்றெல்லாம் செய்யவில்லை. இதில் மனம் சலித்த சீடன், எப்போது நான் தியானம் கற்பது என்றான். நான் குழி வெட்டியதும் தியானம்தான். வாழ்வே தியானம்தான். எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லை என்று சிரித்தபடி சொன்னார். ஜென் குரு. மாசற்ற மனம் உள்ளவர் விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை. நாம் அனைவரும் ஜென் குரு அல்ல. ஆயிரம் எண்ணங்கள் அலையடிக்கும் மனது நம்முடையது. ஆசை, அச்சம், கோபம், காமம், வெறுப்பு, பகை என்ற சிலந்திவலைப் பின்னலில் சிக்கித் தவிப்பவர்கள். நெருப்புக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் நிற்பதுபோல், நல்ல எண்ணங்களும், தீய விருப்பங்களுக்கும் இடையில் நடப்பதே வாழ்க்கை. நல்லதையே நாடு என்று அறிவு சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று மனக்குரங்கு தினமும் பாடம் நடத்துகிறது. இந்தக் குழப்பத்திலிருந்து எப்படி எப்போது நமக்கு விடுதலை என்பதுதான் கேள்வி? நாம் ஒன்று செய்வோம். காலை- மாலை இரு வேளையும் தனிமையில் கொஞ்ச நேரம் கண்மூடி மெளனமாக அமர்ந்து உள்முகமாக யோசிப்போம். நமது பலம் - பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம். பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம். ஒரே பிறவியில் புத்தனாக முடியாது என்கிறது பெளத்தம். ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம். எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது? விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்? தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு, தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம். உங்களுக்குத் தெரியுமா?
1. வளியினூடாக ஒலி பயணம் செய்யும் கதி என்ன ms-1? * 332 ms-1
எம்.எம்.எல்.பாத்திமா மினா
|
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |