மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
அரசியல் களத்தில்........சொன்னதும்....... சொல்லாததும்!! மஹிந்தவை தோற்கடித்ததன் தவறை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்- அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க? உங்களை வெற்றி பெறச் செய்ததின் தவறையும் மக்கள் எப்போதோ உணர்ந்து விட்டார்கள்.! பெருந்தோட்ட மக்கள் வாழ்வில் அறுபது மாதங்களில் சுபீட்சம். - இ.தொ.கா. தேர்தல் விஞ்ஞாபனம் கூறுகிறது ? அப்பாடா....! இவ்வளவு காலமும் மலையக மக்கள் வாழ்வில் சுபீட்சம் இல்லேங்கிறதை இப்பவாவது ஒத்துக்கிaர்களே. சந்தோசம்.! ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே எமது எதிர்கால இலக்காகும். - வேட்பாளர் அன்வர் முஸ்தபா ? சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுக்காதீங்க ஊழல் என்கிற வார்த்தையை கொஞ்சம் அமுக்கி வாசிங்க.! பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் கஜேந்திரகுமார் செய்தது என்ன? - சுமந்திரன் கேள்வி ? தூங்கிறவரை எழுப்பாட்டுங்க சுமந்திரன் சார். தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்புaங்களே. நடக்கிற காரியமா?
! கொழும்பில் தமிழ் வேட்பாளர்களின் வாக்குகளை சிதறடிக்காதீர்கள். - மிதிலா சிறிபத்மநாதன் ? சபாஷ்! சரியாச் சொன்னீங்க, உதிரிக் கட்சிகள், உருப்படியில்லா சுயேச்சைக் குழுக்களுக்கு வாக்குகளைப் போட்டா. மனோ கணேசனைப் போல உள்ளவங்க பாராளு மன்றத்துக்கு போக முடியாதே.! இத்தனை தகுதி உள்ள இவரையும் - இவரது அணியையும் பலப்படுத்துவோம். அறிவு ஆற்றல் அனுபவம் ஆளுமை...... நேயம், பிரபல்யம், நுணுக்கம், சாணக்கியம்... - தேர்தல் விளம்பரத்தில் ரவூப் ஹக்கீம் ? எல்லாத்தையும் சொல்லி இருக்கீங்க. சொல்ல வேண்டிய சிலதை சொல்லாம விட்டுட்டீங்களே?! திருட்டுக் கூட்டத்திற்கு வாக்களிப்பதா? தூய்மையான ஆட்சிக்கு வாக்களிப்பதா? மக்கள் தீர்மானிக்க வேண்டும். - பசறையில் பிரதமர் ரணில் ? இந்தக் கேள்விய பசறையில் மட்டும் கேட்டா போதாது - மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல் என்று ஒவ்வொரு மாவட்டமா கேட்டத்தான மக்களுக்கு ஞானம் பொறக்கும்.! மஹிந்தவுடனா? மைத்திரியுடனா? என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பகிரங்கமாகக் கூற வேண்டும். - வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க ? எந்தக் கட்சி ஆட்சிக்கு வருதோ.... அந்தக் கட்சியோட இருக்கணுமங்கிறதுதான் தம்பி ஆறுமுகத்தின் தாத்தாவோட தாரக மந்திரம். கவலைப்படாதீங்க சார். நாளைக்கு நிச்சயம் உங்க பக்கம் தான்!! வடமாகாண முதலமைச்சர் இம்முறை தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளார். - பத்திரிகைச் செய்தி ? ஆடர்... ஆடர்... அமைதி! அமைதி! வந்தவழி மறக்கிற மனுஷரில்ல நம்ம நீதியரசா! அறுபது மாதத்தில் புதிய நாடென்பது, வடகிழக்கு இணைத்த தமிbழமே! - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ? அப்போ புலிகள் இயக்கத்தை பூண்டோட அழிச்சிட்டேன்னு நீங்க மார்தட்டுனது எல்லாம் வெறும் புரூடாவா? |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |