தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உரித்தான ஒரு கட்சியாகும்
எனதமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் சமூக
சேவை செயற்பாட்டாளர் சிவலிங்கம் சோமசுந்தரம் (வீரசிங்கம்) தெரிவித்தார்.
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில்
களமிறங்கவில்லை. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளை தீர்த்து வைக்கும்
நோக்கத்துடனேயே தமிழர் விடுதலைக் கூட்டணி களமிறங்கியுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது ஆனந்த சங்கரியின் கட்சியல்ல இது ஒட்டுமொத்த
தமிழர்களின் கட்சியாகும். இதற்கு ஆனந்த சங்கரி செயலாளராக உள்ளார்.
இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உரித்தான ஒரு கட்சியாகும். இந்தக் கட்சியை ஆனந்த
சங்கரிக்கு எழுதிக் கொடுக்கவில்லை. ஆனந்த சங்கரியும் இந்தக் கட்சியில் எம்மைப் போல
ஒருவராகும். இந்தக் கட்சியின் செயலாளராக ஆனந்த சங்கரி இருந்து கொண்டு யாருக்கும்
சோரம் போகவில்லை.