இன்றைய நவீன உலகில், மக்களின் வாழ்க்கை முறைமையே 75 வீதமானவர்களின் மாரடைப்புக்கு
காரணம் அமைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இளம் வயதிலே மாரடைப்புக் காரணமாக உயிரிழப்பவர்களின் தொகை தற்போது அதிகரித்துள்ளது.
எளிமையான ஆறு விதிகளை கடைப்பிடித்தால் மாரடைப்பை தடுக்கலாமென ஆய்வுகளின் மூலம்
கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த ஆறு விதிகளையும் இளம் வயதில் இருக்கும் பெண்கள்
கடைப்பிடிப்பார்களாயின், நிச்சயம் மாரடைப்பை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று அவ்
ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகைத்தல் நிறுத்துதல், சுகாதாரமான எடையை பராமரித்தல், ஒரு கிழமைக்கு 150 நிமிட
உடற்பயிற்சி செய்தல், கிழமைக்கு ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலதிகமாக தொலைக்காட்சி
பார்ப்பதை தவிர்த்தல், ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு பானம் அருந்துதல் மற்றும்
சுகாதாரமான உணவுகளை உட்கொள்ளுதல் என்பவையே அந்த 6 விதிகளாகும்.
இந்த விதிமுறைகள் 30-40 வயதுடைய பெண்களுக்கு பொருந்துமென மேற்படி தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இரண்டு தசாப்தங்களாக 70,000 பெண் தாதிமார்களின் நடவடிக்கைகளை அவதானித்தே இவ்வறிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொது சுகாதார பிரிவின் நோய் மற்றும் கதிர்வீச்சு
ஆய்வின் முன்னணி ஆய்வு எழுத்தாளர் அன்ரியா சோமிஸ்டெக் என்வரே இவ்வறிக்கையை
வெளியிட்டுள்ளார்.
இந்த விதிமுறைகள் தற்போது வாழும் மேலைத்தேய பெண்களுக்கு மிக முக்கியமான செய்தியாகும்.
மது அருந்துதல் மற்றும் புகைத்தல் என்பதை நற்கால பெண்கள் அவர்களது அன்றாட
வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டுள்ளனர்.
ஏற்கனவே, மாரடைப்புக்காக மருந்து பயன்படுத்துவோரும் மாரடைப்பு வருவதை
தடுப்போருக்கும் இவ்விதி முறைகள் மிகவும் பொருந்தும். இனிவரும் சமுதாயம் நல்லதொரு
சமுதாயமாக இருக்க வேண்டுமாயின் இவற்றை கடைப்பிடிப்பது அவசியம்’ என்று அவர்
கோரியுள்ளார்.
எனவே இந்த முறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பழகுவோம்.
பல் துலக்குவதில் உள்ள நுட்பங்கள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகு? ஒவ்வொருவரின்
புன்னகையில் தெரியும். அழகான புன்னகைக்கு அடிப்படை ஆரோக்கியமான பற்கள், அவற்றைப்
பராமரிப்பது குறித்துப் பார்ப்போம். பொதுவாகக் குழந்தைகள் அதிக சாக்லேட், ஐஸ்கிரீம்
போன்றவற்றை விரும்பி உண்பார்கள். முடிந்த வரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
இல்லையென்றால் இவற்றை உண்டபின் நன்றாக வாய் கொப்பளிப்பது பல்லுக்கு நல்லது. உணவு
வகைகளைப் பொறுத்த வரை நார்ச்சத்து மிக்க உணவு வகைகள் உடல் நலனுக்கு மட்டுமலலாமல்
பல்லுக்கும் மிகவும் நல்லது. அடுத்து கல்சியம் நிறைந்த பால், தயிர், முட்டை போன்ற
வற்றையும் உணவில் போதுமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறை உணவு உண்டபின், வாய் கொப்பளித்து பற்சுவைச் சுத்தம் செய்வது நன்று,
கண்டிப்பாகக் காலையும் இரவும் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். இரவில் சுரப்பிகள்
மிகமிக குறைந்த அளவிலேயே உமிழ்நீரைச் சுரக்கின்றன. எனவே, வாய் சுத்தமாக
இல்லாவிட்டால் பல் சொத்தையை உண்டாக்கும். பாக்டீரியாக்கள். உணவுத் துணுக்குகளோடு
பல்கிப் பெருகி பற்சிதைவை உண்டாக்கும். அதனால் காலையும் இரவும் கண்டிப்பாகப் பல்
துலக்க வேண்டும்.
குழந்தைகளும் இப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு
முறை பல்துலக்கும் போதும் தரமான GShiuL (Fluoride) நிறைந்த பற்பசையையும்
மிருதுவான பல்துலக்கியையும் பயன்படுத்த வேண்டும். பற்களை அதிக அழுத்தம் கொடுத்துத்
தேய்க்கக் கூடாது. மிருதுவான குறைந்த அழுத்தமே போதும். 2-3 நிமிடங்களில் எல்லாப்
பற்களையும் சுத்தம் செய்வது, நாக்கு, அன்னம், வாய் ஈறுகள், உட்புறத் தசைகள்
போன்றவற்றையும் சுத்தம் செய்வதுடன், விரல்களால் ஈறுகளுக்கு மசாஜும் செய்ய வேண்டும்.
பல்துலக்கியைக் குறைத்தது 3-4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வருடத்துக்கு ஒருமுறை தேர்ந்த பல் மருத்துவரிடம் சென்று பல் சுத்தம் செய்து கொள்வது
(Scaling) மற்றும் பற்களைப் பரிசோதனை (Consultation and Diagnosis) செய்து
கொள்வது நன்மை தரும். பற்சிதைவை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பற்களைக் காப்பாற்றிக்
கொள்ளலாம்.
பாய்போட்டு படுத்தால் நோய்விட்டு போகும்
மனிதர்கள் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தூங்குவதற்கும் அளிக்கின்றனர்.
தூக்கமே மனிதர்களின் புத்துணர்ச்சியை தூண்டி அவனை செயலாற்றவைக்கும் ஆற்றல் கொண்டது.
நாள்தோறும் இச்செயல் நடந்தால்தான் அவனது களைப்பு நீங்கி மீண்டும் வேலையை செய்ய
முடியும். மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் தூங்கியே விழிக்கின்றன.
அதுவே மறுநாளின் செயல்பாட்டை தீர்மானிக்கும் ஆற்றலாகவும் விளங்குகிறது. தொடக்கத்தில்
பாறைகளிலும் மணல் மேடுகளிலும், கட்டாந்தரையிலும் படுத்து உறங்கிய மனிதன், நாளடைவில்
விலங்குகளின் தோல்கள் கொண்ட படுக்கை விரிப்புகளை உருவாக்கி தூங்கும் படுக்கையை
உருவாக்கினான்.
பின்னர் தாவரங்களை கொண்டு படுக்கைகளை உருவாக்கிக் கொண்டான். இன்று தூக்கத்திற்காக
நாம் பயன்படுத்தும் படுக்கைகள் தற்காலத்தில் மனதிற்கு பிடித்த வண்ணங்களில்
வடிவமைப்பில் விற்கப்படுகின்றது. இந்த படுக்கைகளிலும் தங்களின் அந்தஸ்து பார்த்து
வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனால், விலையுயர்ந்த படுக்கைகள் வாங்கினாலும்
முழுமையான தூக்கம் இல்லாமல் அல்லல்படுவோரும், அதற்காக மருத்துவரை தேடுவோர்
எண்ணிக்கையும் தற்காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு மனிதர்கள்
பயன்படுத்தும் நவீன படுக்கைகளும் முக்கிய காரணமாக விளங்குவதாக ஆய்வாளர்கள்
குறிப்பிடுகின்றனர்.
உலகில் முதல் நாகரீக மனிதன் தனக்கென்று ஒரு படுக்கையை உருவாக்கும். போது, அவன்
வாழ்ந்த நிலத்தின் தட்பவெப்ப தன்மையை கருத்தில் கொண்டு படுக்கையை தயார்படுத்தினான்.
பூமியின் நிலப்பரப்பில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பருவகாலம் இருப்பதை உணர்ந்தே
நமது நாட்டிலும் படுக்கை விரிப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் முதன்மையானதாக
இன்றைக்கும் விளங்குவது கோரைப்பாயாகும். தண்ணீர் உள்ள இடங்களில் தழைத்து வளர்த்து
அனைத்திற்கும் வளைந்து கொடுத்து முறியாமல் நீண்ட நாட்கள் உறுதியுடன் இருப்பதை கண்ட
முன்னோர்கள் அதை ஆராய்ந்து படுக்கைகளை உருவாக்கினார்கள்.
தொடர்ந்து பனை ஓலைப்பாயை பிரம்பம்பாய், ஈச்சம்பாய், கம்பளி விரிப்பு, இலவம் பஞ்சு
படுக்கை ஆகியவற்றை உருவாக்கினார்கள். இந்த பாய்களையும் இலவம் பஞ்சு படுக்கை
தயாரிப்புகளையும் செய்வதற்கென்றே பல குடும்பங்கள் வாழ்ந்தன. நாம்படுத்து தூங்கும்
ஒவ்வொரு படுக்கைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. கோரைப்பாயில் தூங்கினால் உடல் சூடு,
மந்தம், விஷசுரத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியும் உறக்கமும் தரும். கம்பளி
விரிப்பை பயன்படுத்தினால் கடும் குளிருக்கு சூட்டை தந்து குளிர் சுரத்தை போக்கும்.
பிரம்பம்பாயில் படுத்தால் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் ஆகியவை நீங்கி நலம்
கொடுக்கும். ஈச்சம்பாயில் படுத்து தூங்கினால் வாதநோய் குணமாகும்.
உயிரைக்குடிக்கும்
டெங்கு; மக்களுக்கு எச்சரிக்கை
டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின்
டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய நான்கு வகை வைரஸ்களாலும் ஏற்படுவது,
வெப்ப மண்டலம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (திலீனீலீs aலீgypti)
என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.
நோய் அறிகுறிகள்:
1) காய்ச்சல் திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல்
உஷ்ணம் திடீரென அதிகரித்தல்.
2) சருமத்தில் வெனற்கட்டிகள் அல்லது வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின்
நடுப்பகுதியில் தோன்றி, முகம் கை கால்கள் என்று பரவத் தொடங்கும்.
3) தசை வலி
4) மூட்டுக்களில் வலி.
5) தலைவலி.
வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது இரத்தத்தில் சாதாரணமாக
இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை இரத்த அணுக்களின் அளவு 4000-10,000 சி.எம்.)
எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல்.
த்ராம்போசைட்டோபினியா: டெங்கு காய்ச்சலின் போது இரத்தத்தில் உள்ள இரத்த வட்டுக்களின்
(platலீlலீts) எண்ணிக்கை குறைவாக காணப்படும். டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி
செய்யும் இரத்த நிணநீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க
பயன்படுத்தப்படும். ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்கு ஆசியா,
இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்க வெப்ப மண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக
வருகிறது.
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை, ஓய்வும், திரவ வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படுவதும்,
உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோஃபென் மாத்திரைகள் ஆகியவை அவசியம்.
இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். இரத்த வட்டுக்கள் அளவு
40,000த்திற்கும் குறைவாக இறங்கும் போது புதிய இரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள்
நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா) அதாவது பி ஆர் பி ஏற்றப்படும்.
வாழ்விடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
மேலும் வெள்ள காலங்களில் எந்த நீரையும் நன்றாக காய்ச்சிய பிறகு பயன்ப டுத்துவது மிக
மிக அவசியமாகும்.
கால் வெடிப்பு நீங்க
சில எளிய வழிகள்
கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள
கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை
சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு
நீங்க சில எளிய வழிகள் இதோ, வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால்
குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால்
வெடிப்பு மறையும்.
கால் வெடிப்பிற்கு எலுமிச்சை சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள்
ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசிவர, கால் வெடிப்பு மறைந்து பளபளப்பாகும்.
இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை
ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும்.
குளிக்கும் போது தேங்காய் எண்ணெய் தேய்த்து குறிக்கவும். (கடையில் மெட்டல்
ஸ்க்கரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும் போது கால் பாதங்களை
தேய்க்கவும் சரியாகிவிடும்) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ்
ஸ்டோன் கொண்டு தேயுங்கள். தினமும் குளிக்குக்கும் போது ப்பூமிஸ் ஸ்டோன் கொண்டு
தேய்த்துக் குளியுங்கள். சரியாகி விடும்.
பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக் கொண்டாலே பாதி குறைந்து விடும். வீட்டிற்குள்ளும்
காலணிகளை போட்டுக் கொள்ளுங்கள். ஒருநாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால்
பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை
நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். மேலும் கிருமிகளை ஒழிக்கும்.
கொத்தமல்லி மருத்துவ குணங்கள்
கொத்தமல்லியை வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம். நம்
முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து
வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு.
இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக் குணம் கொண்டது.
இதன் விதை, காரம், கசப்பு,
துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை. கொத்தமல்லி
கீரையில் ஏ, பி. சி உயிர்ச் சத்துக்களும் சுண்ணாம்புச் சத்துக்களும் இரும்புச்
சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சக்துக்களும் இதில்
இருக்கிறது.
உடலின் கொழுப்புச் சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது.
இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது. கண் பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே
இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை
மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை
நீங்கும்.
இரத்தம் சுத்தம் அடையும். புதிய இரத்தம் உண்டாகும். இரத்தத்தில் கலந்துள்ள
சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை
நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக
ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.
பீனிசம், மூக்கடைப்பு, மூக்கில் புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு
தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.
தோல் நோய்களை குணமாக்குகிறது.
மன அமைதி, தூக்கம் கொடுக்கும்.
4 டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி,
ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும். களைப்பும் காணாமல்
போய்விடும்.
ஐந்து கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரை லீட்டர் நீரில் விட்டு 100 மில்லியாக
காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த
தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
புதிதாக ஏற்படும் வெட்டுக் காயங்களுக்குக் கொத்தமல்லி விதையை பொடி செய்து அதை
காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.
ஈரல் நோய்களுக்கு
பலன் தரும் முள்ளங்கி
முள்ளங்கி நாம் சாதார ணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும், அதனுள்
அடங்கியுள்ள மிகச் சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறியவில்லை.
முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி,
கெம்பு முள்ளங்கிகளும் உண்டு.
* முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து உள்ளுக்குக் கொடுப்பதால் குத்திருமல்
குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.
* முள்ளங்கியைப் பயிர் செய்து இரண்டு மூன்று இலைகள் வந்தவுடன் அந்த இலைகளின் ஒரு
பிடி அளவு எடுத்து 2 முதல் 4 கிராம் அளவு சாதாரண சோற்று உப்பு சேர்த்து காலை மாலை
என இரு வேளையும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை என்கிற சிறுநீரக மற்றும் பல்வினை
நோய்களால் உண்டாக்கும். நீரடைப்பு நீங்கும். மலமும் வெளியேறும்.
* 50 முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து சிறுநீர்
வர சிறுநீர் தாராளமாக இறங்கும்.