சிரேஷ்ட பத்திரிகையாளர் வீ. மூர்த்தி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவின் போது இவர்
தமக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். களுத்துறை மாவட்டத்திலிருந்து கலாபூஷணம் விருது
பெற்ற முதலாவது தமிழர் இவர்.
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, றைகம கீழ்ப்பிரிவில் வசித்து காலஞ்சென்ற வேலாயுதம்
ஆவடையம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரான இவர் ஹொரணை, சென் பிலோமினா கல்லூரி,
பாதுக்க அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவராவார்.
1978ல்
அரச சேவையில் இணைந்து கொண்ட இவர் 1990ம் ஆண்டு முதல் தினகரன் பத்திரிகையின்
பிராந்தியச் செய்தியாளராக பணிபுரிகின்றார்.
சமய, சமூக கலாசார நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர் களுத்துறை மாவட்ட தோட்ட
மக்களின் நன்மதிப்பையும் அபிமானத்தையும் பெற்றவராவார்.