ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
௨ங்கள் பிறந்த . . . .

எண் - 09

வெற்றி என்றும் எங்கள் பக்கம் இல்லற வாழ்வில் சண்டையும் இருக்கும்

9,18,27 போன்ற திகதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணில் பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்களும் 9ஆம் எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் வருகிறார்கள்.

பிறருக்கு அடங்கி நடக்க விரும்பாத இவர்கள் சுதந்திரமான இயல்புகளைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எதிலும் நிதானம் இல்லாத இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அசட்டுத் துணிச்சல் அதிகமாகவே இருக்கும். இதனால், சொல்லிலும் செயலிலும் உணர்ச்சிவசப்பட்டு பேராபத்தைத் தேடிக் கொள்வார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களுடன் இவர்கள் அடிக்கடி சண்டை போட்டு சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். எல்லோரிடத்திலும் கடுமையாக நடந்து கொள்ளும் இவர்கள் தாங்கள் காதலிப்பவர்களிடத்திலும் அப்படியே நடந்து கொள்வார்கள். ஆனாலும், அந்த கடுமைக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் உள்ளன்பானது அவர்களை அடிமைப்படுத்திவிடும் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ள இவர்கள் பணத்தை அள்ளி வீசுவார்கள். அதில் வெற்றி பெற முடியாவிட்டால் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள்.

பயம் என்றால் என்னவென்றே தெரியாத இவர்கள் குறுக்கு வழியில் செல்வதைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதேபோல் சண்டை சச்சரவுகளுக்கெல்லாம் இவர்கள் அஞ்ச மாட்டார்கள். ராணுவம், பொலிஸ் போன்ற துறைகளில் இந்த எண்காரர்கள் அதிகம் இருப்பதைக் காணலாம்.

ஜிoliணீலீ என்றால் வருகின்ற எண் எதுவென்று பாருங்கள்

ஜிoliணீr

873135=27 = 2+7-9

அதேபோல் தீதிஞி என்பதையும் எடுத்துப்பாருங்கள்

தீதிஞி

6+1+2=9

இந்த எண்காரர்களின் மனமும் இப்படித்தான் இருக்கும்.

இந்த எண்காரர்கள் தங்களைப் பற்றி மற்றவர்கள் குறை கூறுவதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். தங்களைப் பற்றி மிக உயர்வாகவே எண்ணிக் கொண்டிருக்கும் இவர்கள் தங்களுடைய திட்டங்களில் பிறர் தலையிடுவதை விரும்பமாட்டார்கள். அதேநேரம் இந்த எண்காரர்ளில் சிலர் தவறு செய்கிறவர்களைத் தான் அதிகம் விரும்புவார்கள்.

மற்றைய எண்களின் சங்கமமின்றி தனி எண்ணாகிய 9ஆம் திகதியில் பிறந்தவர்கள் தான் அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், வியாபாரிகள், தொழில் அதிபர்களாக இருப்பார்கள்.

அதேநேரம், 18,27ஆம் திகதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வேறுவிதமாகவே அமைந்திருக்கும். இவர்களைப் பற்றி பிறந்த திகதி படி எப்படி இருப்பார்கள் என்று எழுதும் போது சொல்கிறேன்.

இவர்களின் மனதில் எப்போதுமே ஒருவித அச்ச உணர்வு வீடுகட்டி அமர்ந்திருக்கும், கொஞ்சம் விரிவாகச் செல்வதாக இருந்தால், நடக்கக் கூடாத காரியங்களை எல்லாம் இவர்களாகவே கற்பனை செய்து கொண்டு அது அப்படி நடந்து விடுமோ... இது இப்படி நடந்து விடுமோ என்று கற்பனை செய்து கலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு எவ்வளவு பெரிய பதவிகள் கிடைத்தாலும் அதனால் எல்லாம் இவர்கள் திருப்தி அடையமாட்டார்கள்.

அதேபோல் பதவி கிடைத்த பிறகு அதை காப்பாற்றிக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்கான முயற்சிகளில் தயங்காமல் ஏடுபடுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த எண்காரர்களில் சிலருக்கு குறிப்பாக பெண்களுக்கு பேராசை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். புத்திகூர்மை உள்ள இவர்கள் குறுக்குவழியில் செல்வதற்குத்தான் அதனைப் பயன்படுத்துவார்கள். இந்த எண்கார சில பெண்களுக்கும் சில ஆண்களுக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட உறவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

இவர்களைப் பார்த்து யார் அதிகம் பயப்படுவார்களோ அவர்களிடம் தான் இவர்கள் அதிகம் அன்புகாட்டுவார்கள். பயப்படுவதைப் போல் பாவனை காட்டினாலும் போதும், அவர்களை தங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டு அவர்களுக்கு அன்புகாட்டி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வார்கள். இப்படிப்பட்ட வித்தியாசமான ஒரு குணம் இந்த எண்காரர்களிடத்தில் மட்டும்தான் இருக்கும் என்பதை நீங்களும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

கொஞ்சம் சோம்பேறிகளாக இருக்கும் இவர்கள் அதைவிட்டு விட்டு சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் வாழ்க்கையில் விரைவாக முன்னுக்கு வருவார்கள். இந்த எண்காரர்களில் சிலர் தங்களுடைய பிடிவாதத்தை நிலைநாட்டுவதற்காக முட்டாள்தனமான சில காரியங்களில், ஈடுபட்டு அதனால் பல இழப்புகளுக்கு ஆளாவார்கள்.

பரிகாரங்களைத் தெரிந்து கொள்ள அழைக்க வேண்டிய எண் 0777686741

(தொடரும்...)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]