விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
ஜனாதிபதியை சந்தித்தார் வீரவன்ச 12 அம்ச கோரிக்கைகளும் கையளிப்புஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்று சனிக்கிழமை நடைபெற் றுள்ளது. விமல் வீரவன்ச கடந்த காலங்களாக அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதுடன், அவர் மீது பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடை யிலான ஐயப்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தேசிய சுதந்திர முன்னணியின் வருடாந்த மாநாட் டில் நிறைவேற்றப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளும் இதன் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |