விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
அழைப்பை ஏற்றார் பாகிஸ்தான் பிரதமர்சார்க் தலைவர்கள் அனைவரும் பங்கேற்புஇந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மோடி பதவி யேற்பு விழாவில் சார்க் கூட்டமைப் பில் உள்ள நாடு களின் தலைவர்கள் அனைவரும் பங் கேற்பது உறுதி யாகியுள்ளது. ரேடியோ பாகிஸ் தான் ஒலி பரப்பு நிறுவனம், இந் தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் இந்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்பது இதுவே முதன் முறை. பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நவாஸ் ஷெரீப் பங்கேற்பது வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |