விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார்

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார்

புதிய பிரதமருடன் தனியாகவும் சந்தித்துப் பேசுவார்

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ் வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங் கேற்பது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை ஜனாதிபதி செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

நாளை 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, நரேந்திர மோடி நாளை 26ஆம் திகதி இராப்போசன விருந்தளிக்க வுள்ளார். பதவியேற்புக்கு மறுநாளான, 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, வெளிநாட்டுத் தலை வர்களுடன் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப் புகளை மேற்கொள்ளவுள்ளார். இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் மோடி தனியாகச் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு தொடர்பாகக் கலந்துரையாடுவார். சம்பிரதாய பூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக் கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]