விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
தேர்தலை இலக்கு வைத்து சேவை செய்யும் கட்சியல்ல இ.தொ.கா
ஊவாவில் தூசு தட்டித் திறக்கப்படும் கட்சி அலுவலகங்கள்

தேர்தலை இலக்கு வைத்து சேவை செய்யும் கட்சியல்ல இ.தொ.கா

செந்தில் தொண்டமான் பெருமிதம்

ஊவா மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே சில அரசியல் கட்சிகள் ஊவாவில் மக்கள் நலன் பற்றிப் பேச முற்படு கின்றன. அத்துடன் தமது மூடிக் கிடந்த அலுவலகங்களைத் தூசு தட்டித் திறந்து மக்களுக்குச் சேவை செய்வது போலப் பாசாங்கு செய்கின்றன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அவ்வாறல்ல. நாம் தேர்தலை இலக்கு வைத்து ஒருபோதும் அரசியல் நடத்தியது கிடையாது. நாம் செய்கின்ற மக்கள் சேவையாலேயே தேர்தல்களில் மக்கள் எமக்குத் தேடி வந்து வாக்களிக்கின்றனர் என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மக்களுக்கான எமது சேவை என்பது வழமையான நாளாந்தமானதொரு விடயம். தேர்தல் வருவதால் அது கூடவும் மாட்டாது, குறை யவும் மாட்டாது. எமது சேவைக்குப் பொய் யான விளம்பரப் பிரசாரம் ஒருபோதும் தேவையுமில்லை. அது நன்மை பெறும் எமது மக்களுக்குத் தெரியும். ஆனால் இன்று சிலர் தேர்தல் அறிவிப்பு வெளியா கியதும் தமது மூடிக் கிடந்த அலுவலகங்க ளைத் தூசி தட்டித் திறந்து மக்களுக்குச் சேவை செய்வது போலப் பாசாங்கு செய்கின்றனர். இதனைப் பார்க்க வேடிக்கையாக உள்ளது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். (வி)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]