2014 இன் முதலாவது காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 514
மில். பதிவு செய்துள்ள செலான் வங்கி
2014 இன் முதலாவது காலாண்டில் வரிக்குப் பின்னரான
இலாபமாக ரூபா 514 மில். பதிவு செய்துள்ள செலான் வங்கி
2014 இன் முதலாவது காலாண்டில் வரு மான வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 798 மில்லியனை
அடைகின்றது
செலான் வங்கி 2014 மார்ச் மாதம் 31ஆம் திகதி முடிவடைந்த 3 மாதங்களில் வருமான வரிக்கு
முன்னரான இலாபமாக 9மூ அதிகரி ப்புடன் கிட்டத்தட்ட ரூபா 798 மில்லியனை பெற்றுக்
கொண்டதன் மூலம் உறுதிமிக்க தொழிற்பாட்டை பதிவு செய்திருக்கின்றது. இதன்படி 2013ஆம்
ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வரிக்குப் பின்னரான இலாபமான ரூபா 505
மில்லி யனுடன் ஒப்பிடுகையில் இக் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 514
மில்லியன் வரை அதிகரித்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைந்த மட்டத்திலான கடன் வளர்ச்சி மற்றும் வட்டி வீத
எல்லைகள் மீதான துறைவாரியான அழுத்தம் என்பவற்றுக்கு மத்தியிலும் 2014 மார்ச் மாதம்
31ஆம் திகதி முடிவடைந்த 3 மாதங்களில் செலான் வங்கியின் தேறிய வட்டி வருமானமானது ரூபா
2.45 பில்லிய னாக 13.7மூ இனால் அதிகரித்துள்ளது. ரூபா 461 மில்லியனாக காணப்பட்ட
தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 2014இன் முதலாம் காலாண்டு காலப்பகுதியில் ரூபா
515 மில்லியனாக 11.67மூ இனால் அதிக ரித்து இருக்கின்றது. கடந்த பல வருடங் களில்
செலான் வங்கி தனது பிரதான வங்கி யியல் தொழிற்பாடுகளில் அடைந்து கொண்டுள்ள திடமான
வளர்ச்சியின் ஒருங்கி ணைந்த ஆற்றலை இது வெளிப்படுத்து வதாக அமைந்திருக்கின்றது.
அது மாத்திரமன்றி, செலான் வங்கி 2013ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது உபாயத்
திட்டத்தின் மீதான மீளாய்வை வெற்றிகரமாக பு+ர்த்தி செய்து அதனை தரமேம்படுத்தி உள்ளது.
இதன்மூலம் வங்கி யின் உபாயத் திட்டத்தை 2016ஆம் ஆண்டு வரைக்கும் விரிவுபடுத்துவதற்கு
வழி பிறந்து ள்ளது. இத்திட்டத்தில் - முற்பண/வைப்பு வளர்ச்சி, கிளை விஸ்தரிப்பு,
வாடிக்கை யாளர் சேவை மேம்படுத்தல், ஊழியர் அபி விருத்தி, செயற்படா சொத்து (NPயு)
குறைப்பு, செலவுக் கட்டுப்பாடு, புதிய சேவை உரு வாக்கம், தகவல் தொழில்நுட்ப உட்கட்ட
மைப்பு, பங்குதாரர்கள் பெறுமதி போன்ற பல்வேறு முக்கிய விடயங்களில் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. நான்கு வருட காலப் பகுதியில் நாட்டிலுள்ள வசதி குறைந்த பாட
சாலைகளில் 100 நூலகங்களை திறப்பதை யும் இந்த உபாயத் திட்டம் குறித்துரைத்து ள்ளது.
2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இவ்வாறான 26 நூலகங்கள் செலான் வங்கியால் திறந்து
வைக்கப்பட்டுள்ளன.