விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
தாமும் செய்யாது அடுத்தவரையும் தடுக்கும் செயல்: முதலமைச்சர் விக்கியின் முயற்சிகளுக்கு இடையூறுதனது பதவி மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் அரசியல் ரீதியாகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயற்பாடுகளுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி. இடையூறாக இருந்து வருவது குறித்து புத்திஜீவிகள் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றல் மற்றும் அரசியல் பேசி காலத்தை வீணடிக்காது அபிவிருத்தி பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் யதார்த்தமான பேச்சுக்கள் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துவரும் மறைமுகமான எதிர்ப்பு அறிக்கைகள் குறித்தே புத்திஜீவிகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |