விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24
SUNDAY JANUARY 26 2014

Print

 
நீதியரசர் ஸ்ரீயின் றுதிக் கிரியை

நீதியரசர் ஸ்ரீயின் றுதிக் கிரியை

மேன் முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜாவின் இறுதிக் கிரியைகள் பொரளை கனத்தை இந்து மயானத்தில் இன்று 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று மாத காலமாக நோய்வாய்ப்பட்டு மருதா னையிலுள்ள சென்டர் தனியார் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்த அவர் வியாழக்கிழமை காலமானார். அவர் அரியவகையான மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரியிலிருந்து 1979 ம் ஆண்டு வெளியான இவர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண் டார்.

1991 ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரையிலும் அரச சட்டத்தரணியாகவும் 1995 ம் ஆண்டு செப்டம்பர் முதல் 1997 ம் ஆண்டு செப்டம்பர் வரை சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 1997 ஓகஸ்ட் 1ம் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அக்காலத்தில் வட மாகாணத்தில் நீதிமன்றங்கள் செயற்படாமையினால் வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே கடமையாற்றினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]