விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03
SUNDAY JANUARY 05 2014

Print

 
திருடிய 32 பவுண் தங்க நகைகள் மீளக் கிடைத்தது

தெய்வத்திற்கு பயந்து திருந்திய திருடர்கள்;

திருடிய 32 பவுண் தங்க நகைகள் மீளக் கிடைத்தது

யாழ்ப்பாணம், மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் 2011 ஆம் ஆண்டு காணாமல் போன 32 பவுண் தங்க நகைகள் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஆலயத்திற்குள் கொண்டுவந்து போடப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டு மேற்படி ஆலயத்திற்குள் நுழைந்த திருடர் கள் அங்கிருந்த 32 பவுண் தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலயத்திற்கு நேற்று முன்தினம் காலை பூசைகளை செய்வதற்கு சென்ற பூசகர் ஆலய உள் வீதியில் தகரப் பேணியொன்று இருந்ததை அவதானித்தார். இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவர்கள் தெல்லிப்பழை பொலிஸில் முறையிட்டுள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]