சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு தடைமாத்தறையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்னவின் தந்தையான ஹேமன் குணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் 10 நியமிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |