சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
வெற்றிபெற்ற 28 பேரில் 20 பேர் அமைச்சர் பதவிக்காக உடும்புப்பிடி:அமிர், சிவா, நீலன், ஜோசப் போன்றோர் ல்லாமையின் நிலைமை உணரப்படுகிறதுஅமைச்சர் பதவிக்காக விண்ணப்பம் கோருவது அனுபவமற்றதொரு செயல் கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் பெருமளவில் வாக்களித்த மக்களை முட்டாள்களாக்கும் விதத்தில் அமைகிறது. ஐந்து கட்சிகளின் கூட்டு இப்போது நான்கா யிருக்கிறது. வீரவசனம் பேசி மக்களிடம் பெற்ற வாக்குகளை இப்போது குழிதோண்டிப் புதைப்பது போல அமைச்சுப் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது ஒரு அனுபவம் வாய்ந்த தலைவரின் கருத்தாக இருப்பதும் வேதனை அளிக்கிறது. தற்போதுதான் மறைந்த தலைவர்களின் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை உணரப்படுகிறது என்று வடபுல புத்திஜீவிகள் தெரிவிக் கின்றனர். அமரர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நீலன் திருச்செல்வம், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் பலர் இன்று இல்லாத வெற்றிடம் உணரப்படுகிறது. வெற்றி பெற்ற 28 உறுப்பினர்களில் 20க்கும் மேற்பட்டோர் தமக்கு அமைச்சர் பதவி வேண்டும் என உடும்புப்பிடி பிடிப்பது கவலை தருகிறது. ஒரு போனஸ் ஆசனத்தை 5 வருடங்கள் பங்கிடுவது போல் அமைச்சுப் பதவிகளையும் வருடம் ஒரு தடவை ஒருவருக்கு என்று பகிர்வதுதான் இப்போ துள்ள பதவி மோகம் பிடித்தவர்களுக்கு சரியானதாக அமையும், எந்தவிதமான கட்டமைப்புமின்றி கூட்டுச் சேர்ந்த கட்சிகளின் சுயநலத்தை மக்கள் அடியோடு வெறுக்கும் நிலைக்கு ஆளாகாமல் உருப் படியான நீதியான தீர்வை எட்ட முற்ப டுங்கள் எனவும் புத்திஜுவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |