நந்தன வருடம் தை மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் அவ்வல் பிறை 14
SUNDAY DECEMBER 30, 2012

Print

 
துப்பாக்கி சூட்டில் சண்டேலீடர் ஊடகவியலாளர் காயம்; உடன் விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு

துப்பாக்கி சூட்டில் சண்டேலீடர் ஊடகவியலாளர் காயம்; உடன் விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாராஸ் செளக்கத் அலி இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாராஸ் செளக்கத் அலி நேற்றுமுன்தினம் இரவு கல்கிஸ்சை ஹோட்டல் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருக்கும்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

இனந்தெரியாத மூவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றிருப் பதாக பொலிஸார் தெரிவித்துள் ளனர்.

கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான செளக்கத் அலி, களுபோவில வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்க ப்பட்ட இவருக்கு சத்திரசிகிச்சை மேற் கொள்ளப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]