நந்தன வருடம் தை மாதம் 14ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை |
||
கொலைச்சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைதுகொழும்பு களியாட்ட விடுதி மோதலில் தமிழ் இளைஞன் பலிகொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள இரவு களியாட்ட விடுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட ஐவரில் நால்வர் கொழும்பின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கொள்ளுப்பிட்டி முனிதாச குமாரசிங்க மாவத்தை தும்முள்ள பகுதியில் உள்ள இரவுநேரக் களியாட்ட விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இக்கைகலப்பில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கொழும்பு 7 பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயகுமார் சுரேன் (22) என்ற இளைஞரே உயிரிழந்திருந்தார். இவர் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணை களிலிருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |