நந்தன வருடம் தை மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் அவ்வல் பிறை 14
SUNDAY DECEMBER 30, 2012

Print

 
முதலமைச்சர்கள் மாநாடு பசறையில் நேற்று ஆரம்பம்

முதலமைச்சர்கள் மாநாடு பசறையில் நேற்று ஆரம்பம்

31வது முதலமைச்சர் மாநாடு பதுளை பசறை யூரி முகாமைத்துவ பயிற்சி நிலைய பிரதான மண்டபத்தில் ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ தலைமையில் நேற்று (16) காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

மாகாண முதலமைச்சர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் மாகாண பிரதான செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

திறைசேரி செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஜனாதிபதி செயலாளருக்காக மேலதிக செயலாளர் அனுர திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சப்பிரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத், வயம்ப வடமத்திய அதுல விஜேசிங்க, தென்மாகாண சான்வி ஜேலால் டி சில்வா, மேல்மாகாணம் பிரசன்ன ரணதுங்க, வடமத்திய எஸ்.எம்.ரஞ்சித், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]