நந்தன வருடம் தை மாதம் 14ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை |
||
இலியானாவுக்கு ரூ. 2 கோடி கொடுத்த இயக்குநர்!
தெலுங்குப் படமொன்றில் நடிப்பதற்காக முன்னணி நடிகை யான இலியானா 2 கோடி ரூபா வரை (இந்திய ரூபா) சம்பளம் பெற்றுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா நடித்துள்ள தமிழில் நண்பன், இந்தியில் பர்பி போன்ற படங்கள் வெற்றி பெற்றதால் அவருக்கு இந்திப்பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளன. இதனால் தெலுங்குப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நாயகனான நாகார்ஜ{ன் மற்றும் அவருடைய மகன் நாகசைதன்யா நடிக்கும் “மனம்” என்ற படத்திற்காக இலியானாவை இயக்குநர் அணுகியுள்ளார். முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்த இலியானா 2 கோடி ரூபா சம்பளம் தருவதாக இயக்குநர் உறுதி யளித்ததும் சம்மதம் தெரிவித் துள்ளார். இது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |