நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை SUNDAY DECEMBER 30, 2012 |
||
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி -2சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23-ம் புலி கேசி- 2இற்கான கதை விவாதம் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின் அலுவலகத்தில் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடந்த வண்ணம் உள்ளன. முதல் பாகத்தை விட இந்தப் பாகத்தில் கொமெடி சற்று தூக்கலாக இருக்கணும் என சொல்லி அதன்படி கதையை எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு. தொடக்க காலத்திலிருந்து தனக்கு கொமெடி டிராக் எழுதிய சிலரை அழைத்து வாய்ப்புக் கொடுத்திருக்கிறாராம் வடிவேலு. சில அரசியல் மாற்றங்கள் காரணமாக கடந்த் ஆண்டு முழுவதுமே வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த வடிவேலுக்கு இது திரையுலகில் மறுபிரவேசமாகும். இதுதவிர ஒரு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் “ஆபிரிக்காவில் வடிவேலு” என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |