புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
மெய்யான நல்லிணக்கமே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

மெய்யான நல்லிணக்கமே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

காணாமற் போனோரது சரியான தகவலறிய வெளிநாடுகளில் வதிவோரின் விபரம் அவசியம்

பலவழிகளிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் சமரசிங்க ஜெனீவாவில் தெரிவிப்பு

கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த தேசியப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட் டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 14ஆம் அகில கால மீளாய்வு அமர்வுகளில் கலந்துகொண்டு நேற்றுமுன்தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போதல்கள் 5600 சம்பவங்கள் பதிவாகி யுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உண்மையில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது அரசாங்கத் தரப்பு தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மை யில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை உறுதிப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான நடவடிக்கை களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை தனிமைப்படுத்த மதிப்பீடு செய்யக்கூடாது எனவும் கள நிலவரங்கள் காலச் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனித உரிமை நிலைமைகளை கவனத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்துவது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து 99 நாடுகளும் காட்டி வரும் கரிசனை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். 2008 ஆம் அமர்வுகளில் உறுதி யளிக்கப்பட்டது போன்று மனித உரிமை தொடர்பில் தேசிய செயற்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகள், கைதிகளின் உரிமைகள், இடம்பெயர் மக்களின் உரிமைகள், மகளிர் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சட்டவிரோத குடி யேற்றங்களை தடுத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் யுத்தத்தின் பின்னர் பல்வேறு காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான உதவிகளிலிருந்து அபிவிருத்தி உதவிகளுக்கு இடம் நகர்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.