நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18
SUNDAY NOVEMBER 04, 2012

Print

 
நோட்டன் பிரிட்ஜ் வாசகர் வட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா காட்சிகள்!

நோட்டன் பிரிட்ஜ் வாசகர் வட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா காட்சிகள்!

ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் வாசகர் வட்டத்தின் ஓராண்டு பூர்த்தி விழாவையொட்டி காசல்ரீ பிரதேசமே களைகட்டியிருந்தது. தினகரன் வாரமஞ்சரி பல்வேறு இடங்களில் வாசகர் வட்டங்களை ஆரம்பித்து வருகின்றபோதிலும் ஹட்டனில்தான் முதற்தடவையாக நோட்டன் பிரிட்ஜ் வட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அந்த முதல் வட்டம் முதன்மையான வட்டமாகத் திகழ்ந்து வாசிப்பை மட்டுமன்றி பல்வேறு சமுகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அதற்கமைய, சிறுவர் தினம், முதியோர் தினம், சேமிப்பு தினம் ஆகியவற்றை ஒருங்கமைத்து ஓராண்டு பூர்த்தி விழா நேர்த்தியாக்கப்பட்டிருந்தது.

இதற்கு காசல்ரீ தொழில்நுட்ப நிறுவனமும் தேசிய சேமிப்பு வங்கியும் அனுசரனை வழங்கியிருந்தன. இதன்படி 40 மாணவர்களுக்குத் தலா ஐந்நூறு ரூபா வீதம் வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டது. 15 முதியவர்களுக்கு அடையாள அட்டைகள், பரிசுகள் வழங்கப்பட்டன. அதே நேரம் வாசகர் வட்ட அங்கத்தினர்களுக்கு நினைவுப் பரிசில்களும் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு காசல்ரீ தோட்ட நிர்வாகத்தினர், சமுர்த்தி பணியாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கினார்கள்.

தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவரின் கருத்தியலுக்கு அமைய ஏற்படுத்தப்பட்ட வாசகர் வட்டத்தைச் சரியாகச் செயற்படுத்துவதில் நோட்டன் பிரிட்ஜ் வாசகர் வட்டத்தின் தலைவர் மு. இராமச்சந்திரன் வெற்றி கண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பிரதேசத்தில் வாழ் சகல இனமக்களையும் ஒன்றுபடுத்தி ஒரு இணக்கப்பாடான முறையில் விழாவை நடத்தியமை ஓர் முன்மாதிரி பணியென்றால் மிகையில்லை

தவிரவும், வாசகர் வட்டத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய கழகங்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டமை விழாவின் சிறப்பம்சமாகும்.

   

இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]