இலங்கையின் அழகியாக கிரீடம் சூட்டிக்கொள்ளப் போகிறவர் யார் ஆணழகன் யார் என்பதை
அறிந்துகொள்வதற்கு இன்னமும் 7 நாட்களே உள்ளன.
இலங்கையின் 5 மாகாணங்களைச் சேர்ந்த 20 பேர் இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.
இவர்கள் மாகாண மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள். இம்மாதம் 29 ஆம் திகதி
இடம்பெறவுள்ள இம்மாபெரும் நிகழ்வில் கடந்த ஆண்டு உலக புவியழகியாக முடிசூட்டப்பட்ட
ஒல்கா அலவா வர்காஸ் பங்குகொண்டு நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டவுள்ளார்.
கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெறும் இந்நிகழ்வை ஸ்டூடியோ 9 இன்டர்நெஷனல் 12ஆவது
தொடர்ச்சியான வருடமாக ஏற்பாடு செய்துள்ளது.
பெண்கள் பிரிவுக்கு சன்டே ஒப்சேவர், ரியல் ரேடியோ, ரூபவாஹினி, எக்லிப்ஸ் ஃபஷன்
ஹுவல்லரி என்பன முக்கிய அனுசரணையாளர்களாக உள்ளன. அதேவேளை, மாகளா டெக்ஸ் டொங் நீ
பியூட்டி பார்லர், பியூஜிபில்ம், ளி&தி எட்டேர்னல் ஸ்டைல், டெலிபிக்ஸ் பிறைவேட்
லிமிடெட், சுப்ரீம் ஒர்கிட், லூகாஸ் பற்றரி ஆகியன இணை அனுசரணை வழங்குகின்றன.
நுழைவுச் சீட்டுக்கள், கொழும்பு 06 இலுள்ள எக்லிப்ஸில் கிடைக்கும்.