2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதற்காக
தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்று
ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் நாயகம் பான் கீ மூன் இளைஞர் விவகார மற்றும்
திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் உத்தியோகபூர்வமாக
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற
67 ஆவது மாநாட்டின் போது பான் கீ மூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் இளைஞர் மாநாடு ஆனது முதல் தடவையாக ஆசிய நாடொன்றில் நடைபெறவுள்ளதென்பது
குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகுவதோடு 1976ஆம் ஆண்டு காலகட்ட வரலாற்றில் நமது நாட்டில்
நடைபெற்ற அணிசேரா மாநாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின்
மாநாடு போன்ற சர்வதேசரீதியான மாநாடுகள் போன்ற ஒரு மாநாடாக அமையும்.
அத்துடன் 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இவ் இளைஞர் மாநாடென்பது இலங்கையில் வாழும்
இளைஞர் சமுதாயத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் அமையும் என்பதும் குறிப்பிடத் தக்கது.
67 ஆவது மாநாட்டின் போது பான் கீ மூன் அவர்களை உத்தியோக பூர்வமாக சந்தித்து,
அமைச்சர் டலஸ் அழகப்பெரும யுத்தத்திறற்கும் முன், யுத்தத்திற்கு பின்னான
காலகட்டங்களிலும் மற்றும் தற்போதைய காலகட்டங்களிலும் இலங்கையில் வாழும் இளைஞர்
சமுதாயம் பெற்றுள்ள அபிவிருத்தியை பற்றி தெளிவுப்படுத்தினார்.