நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
சமூகஜோதியின் “சங்கநாதம்”வெளியீடு இன்று புரவலர் புத்தகப் பூங்காவின் 31ஆவது மலர் இன்று 7ம் திகதி ஞாயிற் றுக் கிழமை பி.ப 4.30 மணிக்கு பிரை ட்டன் ரெஸ்ட் மண்ட பத்தில் மலர்கிறது. சிலாவத்துறையைச் சேர்ந்த சமூகஜோதி எம்.ஏ. றபீக்கின் பல்வேறு சொற்பொழிவுகளை உள்ளடக்கியிருக்கும் “சமூகஜோதியின் சங்க நாதம்” எனும் இந்நூலின் முதற் பிரதியை முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய டபிள்யு. எம். எஹியான் பெற்றுக் கொள்வார். கம்பன் கழக விழாவில் தலைமையுரை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழாஞ்சலி உரை, சர்வதேச மகளிர் தினவிழா உரை, தமிழக எழுத்தாளர்கள் மூவரின் மூன்று நூல்கள் அறிமுக விழா உரை, அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா உரை, மீலாத் விழா உரை உட்பட பல்வேறு வரவேற்புரைகள், வாழ்த்துரைகள், அறிமுக உரைகள், தலைமை உரைகள், சிறப்புரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. புரவலர் ஹாஷிம் உமர் முன்னிலையில் ஆர். பாரதி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் வாழ்த்துரையும், என்.எம். அமீன் வரவேற்புரையும் கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி வெளியீட்டுரையும், திரு .கோபாலகிருஷ்ணன் நன்றியுரையும் நிகழ்த்துகின்றனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |