இலங்கை - மேற்கிந்தியதீவுகள் கொழும்பில் இன்று பலப்பரீட்சை
இருபது-20 உலகக் கிண்ணம் யாருக்கு?
இலங்கை - மேற்கிந்தியதீவுகள் கொழும்பில் இன்று பலப்பரீட்சை
இலங்கையில் நடைபெற்றுவரும் இருபது-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்
இறுதியாட்டத்தில் இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. இந்த
ஆட்டம் இன்று இரவு 7 மணியளவில் கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில்
ஆரம்பமாகவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 18ஆம் திகதி அம்பாந்தோட்டையில்
ஆரம்பமான ஆண்களுக்கான நான்காவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர், இன்றுடன்
நிறைவடைகிறது.
நான்காவது உலகக் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிப்பதற்காக இன்று நடைபெறும் இந்த
இறுதியாட்டத்தில், அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி, மற்றொரு
அரையிறுதியாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை
எதிர்கொள்கிறது.
அதேவேளை, இன்று நடைபெறவுள்ள பெண்களுக்கான இருபது-20 கிரிக்கெட் தொடரின்
இறுதியாட்டத்தில் அவுஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் பி.பகல்
2.30 மணியளவில் ஆரம்பமாகிறது. இறுதியாட்டங்களுக்க்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும்
நேற்று காலையே விற்றுத்தீர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.