யுத்த காலத்தில் சேதமான கிளிநொச்சி மஹாதேவ ஆசிரம சிறுவர் இல்ல கோவில்
புனர்நிர்மாணம்
யுத்த காலத்தில் சேதமான கிளிநொச்சி மஹாதேவ
ஆசிரம சிறுவர் இல்ல கோவில் புனர்நிர்மாணம்
படையினர் புனரமைத்த கோவிலை கோத்தபாய திறந்து வைத்தார்
கிளிநொச்சிக்கு கடந்த வாரம் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு
மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவ்விஜயத்தின் போது
மஹாதேவ ஆசிரம சிறுவர் இல்லத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கோவிலை திறந்து
வைத்ததுடன் அவரது வருகையை உறுதிப்படுத்தும் வகையில் பதிக்கப்பட்டிருந்த
கல்வெட்டொன்றையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.
இங்கு வருகை தந்த கோத்தபாய ராஜபக்ஷவை ஆசிரம மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய கலாசார
நிகழ்வுகளுடன் வரவேற்றதுடன், கோத்தபாய ராஜபக்ஷ தேசிய கொடியேற்றியதைத் தொடர்ந்து
மாணவர்கள் தேசிய கீதத்தையும் இசைத்தனர்.
இந்நிகழ்வின் போது செயலாளர் ஆசிரமம் தொடர்பான ஆவணங்களை ஆசிரமத்தின் தலைவரிடம் வைபவ
ரீதியாக கையளித்தார். இக்கோவிலானது எல்.ரி.ரி.ஈ யினரின் பயங்கரவாத நடவடிக்கைகளின்
போது முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் ஆசிரமத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க
பாதுகாப்புப் படையினரால் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது.
அத்துடன் இதற்கான நிதி கொழும்பு சிபிங் லைன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்
திரு. எரிக் அம்பலாங்கொடவினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிரமத்தில்
323 மாணவ மாணவியர் கல்வி கற்கின்றனர் இவர்களில் 146 மாணவர்களும் 177 மாணவியரும்
அடங்குவர்.