கர வருடம் பங்குனி மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
ரயிலில் மோதுண்டு மூதாட்டி பலி! வட்டவளையில் சம்பவம்ஹட்டன் - வட்டவளை 101ம் கொலனி பிரதேசத்தில் ஓடும் ரயிலில் மோதுண்டு மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழ க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கொட்டகலையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளார். ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த மூதாட்டி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார். உயிரிழந்தவர் லொனெக் பிரிவு மீனாச்சிவத்தை, நோட்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 76 வயதான பகவானி பழனி அம்மாள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |